Categories
மாநில செய்திகள்

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது….. டெல்லிக்கு பறந்த ஸ்டாலின் கடிதம்….!!!

இலங்கை கப்பற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், சித்திரவதைக்குள்ளாக்குவதும், தொடர்கதையாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு டெல்லிக்கு கடிதம் எழுதி மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது. அதன்படி இலங்கை கப்பற்படையினால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை அவர்களது விசைப்படகையும் விரைவில் விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கருக்கு தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி உள்ளார்.

அதில், இலங்கை கப்பற்படை யினரால் 20.9.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 8 இந்தியன் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும் அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டத்தையும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், இது தவிர ஏற்கனவே 95 மீன்படி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். சமீபத்தில் 12 தமிழகம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதில் வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்ளும், அதே நேரத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை மூலம் தீவிரம் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |