கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், தற்போது மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசனின் நீண்ட நாள் ஆசையான மருதநாயகம் திரைப்படத்தின் பட்ஜெட்டை சோனி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதுகுறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மருதநாயகம் என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இவரின் இயற்பெயர் முகமது யூசப் கான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்பட்ட மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்ட படம் மருதநாயகம். கடந்த 1994-ஆம் ஆண்டு மருதநாயகம் திரைப்படத்தின் ஆரம்பப் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் தொடக்க விழாவின்போது இங்கிலாந்து ராணி எலிசபெத் பங்கேற்றார். இந்நிகழ்வு உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. இத்திரைப்படத்திற்கு ஆயிரம் குதிரைகள், யானைகள், போர் வீரர்கள், அவர்களின் உடைகள் என செலவுகள் ஏராளமாக இருந்தது. தற்போது இருப்பது போல் கிராபிக்ஸ் அந்த காலகட்டத்தில் இல்லாததால் பட பட்ஜெட் அதிகமாக இருந்தது. கமல்ஹாசன் இத்திரைப்படம் பணப்பற்றாக்குறையால் மட்டும் நிற்கவில்லை, உலக வினியோக நெட் தேவை காரணமாகவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இத்திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலம் பிரென்ச் உள்ளிட்ட மொழிகளிலும் உள்ளன என கூறினார் கமல்ஹாசன். இப்படி பல காரணங்களால் மருதநாயகம் படம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் கூடிய விரைவில் வெளியாகும் என கமல்ஹாசன் விடாமுயற்சியுடன் இருக்கிறார். தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கமல்ஹாசன் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது என்னவென்றால் 1997-ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டு இடையில் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் தொடங்குவதற்காக சோனி நிறுவனத்துடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறியிருக்கிறார். தற்போது கமல்ஹாசன் இப்படத்தின் பணிகள் ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார். இத்திரைப்படம் ராஜ் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கின்ற படத்தை ராஜ் கமல் இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் பணிகள் விரைவாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.