உலகத்தில் தினம்தோறும் பல்வேறு சம்பவங்கள் நடந்து மக்களை ஆட்டி படைத்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி மக்களை அச்சறுத்தி வருகிறது. இதற்கிடையே மேலும் பல சம்பவங்கள் அரங்கேறி மக்களின் உயிரைப் பறித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இதில் முக்கியமான சம்பவம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தைவானின் கிழக்கு பகுதியில் இருக்கும் சுரங்கப் பாதையில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 36ஆக அதிகரித்தது.
இதனையடுத்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கனடாவில் உள்ள பிரபல மாகாணத்தில் மீண்டும் கடுமையான விதிமுறைகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவ்வாறு உலகில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.