நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் இமாச்சல பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கை தளர்வு செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் முதல்வர் தலைமையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு தளர்வு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
முன்னதாக இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதாவது இரவு 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கு உத்தரவு ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கொரோனா பரவல் தற்போது கணிசமான அளவில் குறைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கை தளர்வு செய்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.