Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மீண்டும் இயக்கப்பட்ட பெங்களூர்- காரைக்கால் ரயில்…. சேலத்தில் மலர் தூவி வரவேற்பு…..!!!!

பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கும், காரைக்காலில் இருந்து பெங்களூருக்கும் ரயில் இயக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் இந்த ரயில் இயக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை பெங்களூரில் இருந்து புறப்பட்டு சேலம் டவுன் ரயில் நிலையத்துக்கு வந்த இந்த ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு ராகுல் ஸ்போர்ட்ஸ் மற்றும் இளைஞர் நல விளையாட்டு மேம்பாடு அமைப்பின் தேசிய தலைவர் மு விஜய லட்சுமன் தலைமை தாங்கி ரயிலுக்கு மலர் தூவி வரவேற்றார்.

அதனை தொடர்ந்து ரயில் என்ஜின் டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார். இது குறித்து அவர் கூறியது, பெங்களூர் காரைக்கால் ரயில்வே இயக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.செல்வகுமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து அந்த ரயில் மீண்டும் இயக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் கருப்பூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேசன், சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் யாசர் அராபத், தமிழ்நாடு தகவல் உரிமை சட்டத்துறை மாநில பொதுச் செயலாளர்கள் கருப்பூர் சக்தி, சதீஷ்குமார், சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |