கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முந்தைய ஆட்சியில் இருந்த சட்ட திட்டங்களையும் மாற்றி உள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு பொது இடங்களில் வைத்து கசையடி கொடுக்க தலீபான்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் லோகோ மாகாண கவர்னர் அலுவலகம் குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் இந்த நிகழ்ச்சியை காண வருமாறு முஜாகிதீன் அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் பழங்குடி தலைவர்கள், உள்ளூர் மக்கள் போன்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளது. பின்னர் பொது இடத்தில் வைத்து 12 பேருக்கு கசையடி கொடுக்கப்பட்டது. அதில் ஒவ்வொருவருக்கும் 21 கசையடி முதல் 39 கசையது வரை கொடுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.