இன்று பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியது. காலை முதலே வானகரத்தில் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பு முடிவு செய்தது. அதேசமயம் ஓபிஎஸ் தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டாம் என்று தெரிவித்தனர். பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கத்தை இபிஎஸ் ஆதரவாளர்கள் பேச விடவில்லை. இதனால் கோபமடைந்த ஓபிஎஸ் சட்டத்திற்குப் புறம்பான பொதுக்குழு என்று முழக்கமிட்டு பொதுக்குழுவை புறக்கணித்து வெளியேறினார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வரும் ஜூலை 11ம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம் மண்டபத்தில் சலசலப்புடன் தற்போது முடிவடைந்தது. ஓபிஎஸ் மேடையில் இருந்து திடீரென்று வெளியேறியதால் இனி இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பே இல்லை. இனி தான் ஓபிஎஸ்-ன் அதிரடி ஆட்டங்கள் அரங்கேறும் என்று தெரிகிறது.