Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரித்த தொற்று… 8 நகரங்களில் இரவு ஊரடங்கு… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து தொற்று அதிகரித்துவரும் காரணத்தினால் 8 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பிடம் பல மாநிலங்களில் தற்போது தொற்று அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் சில கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக தொற்று லேசாக அதிகரித்து வருகின்றது.

இதனால் குஜராத் மாநிலத்தில் வதோரா, காந்திநகர், சூரத், ராஜ்கோட் உள்ளிட்ட 8 நகரங்களில் வரும் 15ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது தொற்றிலிருந்து 14 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 165 ஆக உள்ளது.

Categories

Tech |