உடல் முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில் தொழிலாளி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆவேரிபள்ளி கிராமத்தில் மரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னப்பா(40) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிராம சேவை மைய கட்டிடம் அருகில் சின்னப்பா சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சின்னப்பாவின் உடலில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று சின்னப்பாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் மிளகாய் பொடியை தூவி இருப்பதால் மர்ம நபர்கள் யாரேனும் அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.