Categories
மாநில செய்திகள்

மின் நுகர்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. “ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும்”….. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

மின் நுகர்வோரின், ‘ஆதார்’ எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசிதழ் வெளியிட்டுள்ளது.

மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் அரசிடமிருந்து இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நுகர்வோர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்பது, வாடகைதாரர்களிடம் அதிகம் மின் கட்டணம் வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்..

தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.. முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெரும் வீட்டு நுகர்வோர், குடிசை நுகர்வோர், பொது வழிபாட்டுத்தளங்கள், விவசாய பயன்பாடு மின் இணைப்புகள், விசைத்தறி, கைத்தறி நுகர்வோர்கள் என மானியம் பெறும் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |