சென்னையில் இன்று மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஆதார் எண்ணை மின் இணைப்பு என்னுடன் இதுவரை 15 லட்சம் மின் இணைப்பு தாரர்கள் இணைத்து இருக்கின்றனர். இன்று முதல் வருகிற டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதற்காக இன்னும் விரிவாக பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக செயல்பட்டு வருகிற 2811 பிரிவு அலுவலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்கள் பண்டிகை நாட்களைத் தவிர ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து தினங்களிலும் நடைபெறுகிறது. அதனால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் சில மாறுபட்ட கருத்துக்கள் பகிரப்படுகிறது. அதாவது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக அரசு மானியம் வழங்கி 100 யூனிட்டுக்குள்ளாக பயன்படுத்தக்கூடிய குடிசைகள் 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி மற்றும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் போன்ற ஏற்கனவே இருக்கின்ற அரசு இலவச மின் திட்டங்கள் அரசு வழங்கும் மானியங்கள் போன்ற அனைத்து நடைமுறைகளும் தொடர்ந்து பின்பற்றப்படும்.
ஆனால் சமூக வலைதளங்களில் உண்மைக்கு மாறாக மின் இணைப்பு ஆதாரங்களுடன் இணைப்பதனால் இவையெல்லாம் ரத்தாகிவிடும் போன்ற தவறான பிரச்சாரங்கள் முன்வைக்கப்படுகிறது. ஏறத்தாழ ஒரு கோடியே 15 லட்சம் மின் இணைப்பு தாரர்களுக்கான தரவுகள் மட்டுமே மின்சார வாரியத்தில் இருந்தது. இந்நிலையில் மின்சார வாரியத்தை மேம்படுத்த வேண்டும். அதேபோல் புதிய தொழில்நுட்பத்திற்கு தகுந்தாற்போல் மின்சார வாரியத்தை நவீனப்படுத்துவதற்காக இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.11 ஆயிரம் கோடி வட்டி செலுத்தப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.