நாடு முழுதும் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி கையிருப்பானது குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் மின்சாரம் உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை கையிருப்பில் வைத்து இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மின்சார அமைச்சகமானது தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில மின்உற்பத்தி நிறுவனங்கள், மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய மின்சார அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
நிலக்கரி பற்றாக்குறைநிலவினால் அதை சரிசெய்ய முன்பே விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் நிலக்கரி அளவைத் தவிர கூடுதலாக வழங்க வாய்ப்பில்லை என்பதை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இது தவிர மின்சார உற்பத்திக்கு நிலக்கரியைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கும் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.