பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மின் வாரியத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, வீடு இல்லாமல் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, ஆயில் என்ஜின் வைத்துள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல், ஊரக வேலை வாய்ப்பில் புதிதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து துணை தலைவர் குப்பண்ணன், மாநில பொருளாளர் சங்கர், செயலாளர் கணபதி, மாவட்ட செயலாளர் சபாபதி, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுச்சாமி மற்றும் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.