தமிழகத்தில் இன்று சட்டப்பேரவையில் கோடை காலத்தில் தேவைப்படும் மின்சாரம் குறித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது: “கோடை காலத்தில் தேவைப்படும் மின் தேவையை கருத்தில் கொண்டு அனல் மின் நிலையங்களில் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அந்த நிலக்கரி வந்துவிடும்.
தமிழகத்தில் இந்த கோடைகாலத்தில் மின்பற்றாக்குறை 2500 மெகாவாட் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆகையால் அந்தத் தேவையை பூர்த்தி செய்ய 3000 மெகாவாட் மின்சாரம் போர்க்கால அடிப்படையில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மின்வெட்டு சீராக உள்ளது. மின்வெட்டு தற்போது இல்லை இனி வரும் காலங்களில் இருக்காது என்று அவர் தெரிவித்தார்.