Categories
மாநில செய்திகள்

“மின்வாரியத்தின் அலட்சிய போக்கால் 2 பேர் உயிரிழப்பு”… ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…!!!!!

நெல்லையருகே மின்சாரம் தாக்கி இறந்த தந்தை மகனின் குடும்பத்திற்கு 26 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தந்தை மகன் இறந்த வருடத்திலிருந்து கணக்கிட்டு ஆறு சதவீத வட்டியுடன் மூன்று மாதத்திற்குள் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருக்கிறது. அதாவது அறுந்து தொங்கிய மின்சார கம்பி உரசியதில் தனது தந்தை சகோதரர் உயிரிழந்துள்ளதாக முத்துக்குமார் என்பவர் மனு கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து மின்சாரம் தாக்கி இறந்த தந்தை மகனின் குடும்பத்திற்கு 26 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும் மின் கம்பி அறுந்து தொங்கும்போது மின்சாரத்தை துண்டித்திருக்க வேண்டும் மின்வாரியத்தின் அலட்சியப் போக்கின் காரணமாக சரியான பராமரிப்பு இல்லாததன் காரணத்தினாலும் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது என நீதிபதி விஜயகுமார் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |