Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த வேன்….. கண்ணாடி வழியாக தப்பித்த ஓட்டுநர்….. போலீஸ் விசாரணை….!!

வேன் மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் இயங்கி வரும் தனியார் கம்பெனிக்கு பணியாளர்களை ஏற்றி வருவதற்காக நேற்று முன்தினம் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனை பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் முக்கண்ணாமலைப் பட்டி சக்கரான்குளக்கரை அருகே சென்றபோது திடீரென மழை பெய்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்துவிட்டது.

இந்த விபத்தில் மின்கம்பம் 3 துண்டுகளாக உடைந்து தீப்பொறி கிளம்பியதால் பிரகாஷ் கண்ணாடி வழியாக தப்பித்து விட்டார். இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். அங்கு புதிய மின்கம்பம் நடும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு இந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |