மினி லாரி-பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள புலவனூரில் கதிர்வேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசியிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கதிர்வேல் இருசக்கர வாகனத்தில் தென்காசியிலிருந்து அம்பை செல்லும் சாலையில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியும் கதிர்வேல் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதிர்வேலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மினி லாரி ஓட்டுநரான ஜமால் மைதீன் என்பவர் மீது வழக்குப் பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.