Categories
மாநில செய்திகள்

மிக பிரபல மருத்துவர் திடீர் மரணம்… சோகம்…!!!

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

அனைத்து நோயாளிகளுக்கு தாயாக இருந்து பணியாற்றிவரின் மறைவு ஈடு செய்ய முடியாதது. 60 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றியவர் சாந்தா,.புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இவர் முன்னோடியாக கருதப்படுகிறார்.

மூச்சுத்திணறல் காரணமாக இன்று தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதில் அவர் புற்றுநோய் சிகிச்சைக்காக பாடுபட்ட சாந்தா என்றும் நினைவிகூறப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |