Categories
உலக செய்திகள்

மாஸ் தகவல்: இலக்கை அடைந்த “ஜேம்ஸ் வெப்”…. பல புதிர்களுக்கு முற்றுப்புள்ளி…. குஷியிலிருக்கும் நாசா….!!

உலகில் தோன்றிய முதல் நட்சத்திரம் மற்றும் விண்மீன்களின் பிறப்பை கண்டறிய அரியேன் ராக்கெட்டின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெற்றிகரமாக பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது இலக்கை அடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

ஜேம்ஸ் வெப் அதிக சக்தி வாய்ந்த மற்றும் உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியாக கருதப்படுகிறது. இந்த தொலைநோக்கியின் முதல் பணி விண்மீன்களின் பிறப்பை கண்டறிவதே ஆகும்.

மேலும் பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரங்களை அறிவதுமாகும். இதனை நாசா கடந்த மாதம் 25 ஆம் தேதி அரியேன் என்னும் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியுள்ளது.

இந்நிலையில் பிரபஞ்சத்தில் பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் தனது இலக்கான காஸ்மிக் பார்க்கிங்கை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெற்றிகரமாக அடைந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

Categories

Tech |