திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த தொங்கிக்கல் பட்டி கிராமத்தின் அருகே உள்ள நாட்டின் மேற்கு கரையில் செக்கு உரல் கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மதுரை பாண்டி நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் ஸ்ரீ மாணிக்கராஜ், ரா. உதயகுமார், கருப்பையா போன்றோர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அவர்கள் அங்கு வந்து கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இது பற்றி அவர்கள் பேசும்போது செக்கு உரலில் மைப்படி எடுத்த கல்வெட்டை கல்வெட்டு வல்லுனர் சாந்தலிங்கம் உதவியுடன் படித்துப் பார்க்கப்பட்டுள்ளது. 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் அதன் மேல் பகுதியில் இரண்டு கல்வெட்டில் தலையூர் என்ற ஊரைச் சேர்ந்த கிட்சேரி புறன்டி வேட்டுவன் உத்தமன் போத்தன் ஞான சோழ பாண்டிய பல்லவராயன் மக்கள் போர்த்த வீமனும் போத்த நாச்சியுமிட்ட செக்கு என்று இரண்டு வரிகள் இடம்பெற்று இருக்கிறது. அந்த கல்வெட்டின் அருகில் உள்ள மற்றொரு தனி பாறையில் போத்தநாட்சி உரல் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் பயன்பாட்டிற்காக சோழ பாண்டிய பல்லவராயனின் மக்கள் போர்த்த விமானம் மகள் போர்த்த நாச்சியில் செக்கை செய்து கொடுத்திருக்கின்றனர் என தெரிய வந்திருக்கிறது. மேலும் மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றை அறிவதற்கு இந்த செக்கு உரல் கல்வெட்டு மிக முக்கிய ஆவணமாக அமையும் என தெரிவித்துள்ளனர்.