Categories
மாநில செய்திகள்

மார்ச் 7ஆம் தேதி முதல் மீண்டும்…. வாஸ்கோடகாமா வேளாங்கண்ணி ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

வாஸ்கோடகாமா, வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் மார்ச் 7ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா  காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதன் பிறகு கொரோனா  பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால் வழக்கம் போல் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சேலம், ஈரோடு, கரூர், திருச்சி வழியே இயக்கப்பட்டு வந்த வாஸ்கோடகாமா, வேளாங்கண்ணி வாராந்திர  எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் மார்ச் 7 தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது இந்த ரயில் நாகப்பட்டினம் வரை மட்டுமே இயக்கப்படும் வேளாங்கண்ணி வரை இயக்கப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் இந்த ரயில் வாஸ்கோடகாமாவில்  இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |