Categories
மாநில செய்திகள்

மார்ச் 15ம் தேதி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி – விவசாயிகள் மகிழ்ச்சி!

கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் வரும் 15ம் தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வெங்காயம் விலை அதிகரித்து வந்ததை தொடர்ந்தும் அதன் ஏற்றுமதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் தற்போது வரத்து அதிகரித்ததால் வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல், மொத்த விலை குறியீட்டின் படி வெங்காய விலை பணவீக்கம் டிசம்பரில் 455.8% ஆக உயர்ந்தது மற்றும் ஜனவரியில் 293.4% ஆக குறைந்தது. தேசிய தோட்டக்கலை வாரியத்தின் தினசரி விலை அறிக்கையின்படி, பிப்ரவரி 29 அன்று டெல்லியில் சில்லறை விலை பிப்ரவரி 1 அன்று ₹ 50 க்கு எதிராக ரூ .40 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு காரீப் பயிரைத் தாக்கிய அதிகப்படியான மழை மற்றும் வெள்ளம் காரணமாக வெங்காய சப்ளை பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது நிலமை கட்டுக்குள் வந்து வெங்காய வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால்ல மலிவான விலையில் வெங்காயம் கிடைத்து வருகிறது. இதனையடுத்து வருகிற 15ம் தேதியில் இருந்து வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அவர் கூறினார். இதனால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |