டெல்லி டிபன்ஸ் காலனி போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டருக்கும், மாமனார் குடும்பத்தினருக்கும் இடையில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் மாமனார் வீட்டுக்கு சென்று பெண் சப்- இன்ஸ்பெக்டரும், அவரது தாயாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தாயை மாமனார் கையால் தள்ள முயற்சித்ததை பார்த்து கோபமடைந்த பெண் சப்- இன்ஸ்பெக்டர் அவரை சரமாரியாக தாக்கினார். இதனை அங்கிருந்த மற்றொரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார். இது குறித்த வீடியோ வைரலானதால் பெண் சப்- இன்ஸ்பெக்டர் மீது வேண்டுமென்றே தாக்கி காயத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.