சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “மானுட குலத்தின் சரிபாதி பெண்கள் என உலகு நினைக்கிறது. உயர்கிறது. நம் நாட்டில், மாநிலத்தில் அந்த நிலையா இருக்கிறது? பெண்ணுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கிற, ஊக்கப்படுத்தி காட்சிகளை தூக்கி எறிய இருக்கும், தோழியரே வாழ்த்துகிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.