மானமதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் நாடு முழுவதிலும் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை-மானாமதுரை இடையே 47 கிலோ மீட்டர் தொலைவிற்கு முழுமையாக ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டதை தொடர்ந்து, மானாமதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இடையேயான 96 கிலோமீட்டருக்கு மின் மயமாக்கும் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளது.
இதற்காக அப்பகுதிகளில் அதிர்வுகளை தாங்கும் வகையில் 18 மீட்டர் தொலைவிற்கு சுமார் 257 மின்கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மானாமதுரையில் இருந்து ராமநாதபுரம் வரையிலான ரயில் பாதையில் சோதனை ஓட்டமும் நடந்து வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. மேலும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் பார்வையிட்டு அனுமதி அளித்த பின்னர் ராமநாதபுரத்திற்கு வரும் அனைத்து ரயில்களும் மின்வழி பாதையில் வந்து செல்லும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.