Categories
தேசிய செய்திகள்

மாநிலத்தில் இந்த வாகனங்கள் நுழைய தடை…. விதியை மீறினால் ரூ.20,000 அபராதம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.காற்றின் தன்மை மிக மோசமாக இருப்பதால் இணை நோய் உள்ள முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் பல மருத்துவமனைகளில் குழந்தைகள் சுவாச கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி வாகனங்கள் மூலமாக ஏற்படும் மாசுபாட்டை குறைப்பதற்கு மக்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் தனிப்பட்ட வாகனங்களில் செல்வதை தவிர்த்து மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். ஒரு சில வாகனங்களை இயக்குவதற்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. அதன்படி BS- VIவாகனங்கள் தவிர நான்கு சக்கர டீசல் இலகுரக மோட்டார் வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி வாகனங்கள் இயக்கினால் 20000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் மின்சாரம் மற்றும் ஜிஎன்சி தவிர மற்ற டிரக்குகள் நுழைவதற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில் இன்று முதல் டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |