நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நேற்று கேள்வி நேரத்தின்போது மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்சனை குறித்து பேசி உள்ளார். அப்போது அவர் பேசியதாவது, மாநிலங்களுக்கு அனைத்து ஜி.எஸ்.டி இழப்பீடுகளை வழங்குவதற்கும் மத்திய அரசு உறுதியளித்ததை தொடர்ந்து ஐந்து வருடங்களாக வழங்கி வந்துள்ளோம். மாநிலங்களின் அக்கவுண்டன்ட் ஜெனரல் தங்களது மாநிலம் எந்த அளவு ஜி.எஸ்.டி இழப்பீடு பெற வேண்டி உள்ளது என்ற சான்றிதழை வழங்க வேண்டும்.
இந்நிலையில் அந்த சான்றிதழுடன் தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்து மாநில அரசு கூறிய உடனே ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்கப்படுகிறது. இதனையடுத்து மாநிலங்களின் தலைமை கணக்காயர் சான்றிதழில் தாமதம் ஏற்படும் போது ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதும் நிலுவையாகிறது என்பதுதான் வெளிப்படை. அதனால் தலைமை கணக்காயர் சான்றிதழ் உரிய ஆவணங்களுடன் மாநிலங்களிடமிருந்து வருகின்ற போது அந்த கணத்திலேயே பணம் விடுவிக்கப்படுகிறது. இது மத்திய அரசு தரப்பில் அவ்வபோது வழங்கி சரி செய்யபட்டு விடுகிறது. இதனையடுத்து செஸ் வழியாக பணம் வருகின்றபோது அது மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.
அதே போல் தலைமை கணக்காயர் மாநிலங்களின் ஜி.எஸ்.டி இழப்பீடு கோரல்களை ஏற்று சான்றளிக்காத போது அதை மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும். மேலும் என் கைக்கு அது உரிய ஆவணங்களுடன் கிடைத்த உடனே பணம் விடுவிக்கப்படுகிறது. இதில் மதிய மற்றும் மாநில அரசிற்கு வாக்குவாதங்கள் இருந்தாலும் அது அரசு அதிகாரிகள் ஒன்றாக அமர்ந்து பேசுகிறபோது தீர்க்கப்படுகிறது. மேலும் பல மாநிலங்கள் ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவையில் போடப்படுவதாக நம்புகின்றது. ஆனால் பணம் வரி செலுத்துகிற மக்களுடையது, என்ற நிலையில் தேவையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் தான் ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவது நிலுவையாகிறது. மேலும் ஜூன் மாதத்திற்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டில் பாதி அளவு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. செஸ் வரி வசூலானதும் மீதமும் வழங்கப்பட்டு விடும் என தெரிவித்துள்ளார்.