Categories
மாநில செய்திகள்

மாநகராட்சி கூட்டம்: திமுக கவுன்சிலருக்கு எச்சரிக்கை விடுத்த மேயர்…. பரபரப்பு….!!!

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டமானது இன்று மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநகராட்சி 8வது வார்டு உறுப்பினர் திமுக-வை சேர்ந்த ஆதி ஸ்ரீதர், தன் வார்டில் சென்ற 6 மாதமாக எந்த பணிகளும் நடைபெறவில்லை எனவும் இதுகுறித்து பல முறை மனு அளித்தும் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும், மற்ற வார்டுகளில் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு எந்த மதிப்புமில்லை எனக் கூறிய ஆதி ஸ்ரீதர், பல குறைபாடுகளை சுட்டிக் காட்டிய போதும் அது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் பதில் இல்லை என கடுமையாக சாடினார். இந்நிலையில் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் பேசியதாவது, யாரோ தூண்டிவிட்டு நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள் என குறிப்பிட்டார். அதன்பின் துணை மேயர் செல்வராஜ் பேசியபோது, சில பேருடன் சேர்ந்து கொண்டு கவுன்சிலர் தனக்கு எதிராகவே தேவை இன்றி புகார் செய்தார் எனவும் அவரது வார்டில் பள்ளிச்சுவர் இடிந்தபோதுகூட தானே சென்று சரிசெய்ததாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மேயர், துணைமேயர் மற்றும் திமுக கவுன்சிலர் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், தன் இருக்கையிலிருந்து கீழே இறங்கி வந்து முதல் வரிசையில் உள்ள ஆதி ஸ்ரீதரிடம் சென்று ஆளும்கட்சி உறுப்பினர் போல் நடந்துகொள்ளுங்கள் எனவும் தேவை இன்றி பேசவேண்டாம் எனவும் கடுமையாக எச்சரித்தார். அதனை தொடர்ந்து மற்ற உறுப்பினர்கள் சமாதானம் செய்து, அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |