மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை புதுவயல் பகுதியில் கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாச்சியார்(62) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இதய நோய் காரணமாக மூதாட்டி மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாத்திரை வாங்க பணம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக மூதாட்டியை வைத்து கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.