Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்…. இன்னும் 2 மணி நேரம் நீடிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கரையைக் கடக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் இது நிறைவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரையை கடந்த பிறகு முதலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதன் பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் புயல் வலு விழக்கும். இதன் எதிரொளியாக தமிழகத்தில் அடுத்த சில மணி நேரங்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |