ஐஐடி களில் குறுகிய கால பயிற்சிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை ஐஐடி களில் குறுகிய கால பயிற்சி வழங்கப் படுவதாக சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தது மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது பற்றி சென்னை கலெக்டர் விஜய ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டெக்னீசியன், ஏர் கண்டிஷனர் மற்றும் நான்கு சக்கர வாகன சர்வீஸ் டெக்னீசியன்கள் பணிகளுக்கு குறுகிய கால பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த குறுகிய கால பயிற்சி கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு படித்து இருந்தாலே போதுமானதாகும். அதனால் விருப்பமுள்ளவர்கள் https://skillindia.nsdcindia.org என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும்044-29813781 என்ற எண்ணிற்கு கொள்ளலாம்.
வடச்சென்னை தொழிற்பயிற்சி நிலையத்தில் காஸ் டங்க்ஸ்டன், ஆர்க் வெல்டிங் மற்றும் எலக்ட்ரீஷியன் டொமஸ்டிக் சொல்யூஷன் போன்ற தொழில் பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 15 முதல் 45 வயது உடையவர்கள் சேர்ந்து கொள்ளலாம்.https://skillindia.nsdcindia.org என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் 044-25209268 என்கிற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் அதே போல் இந்திய அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஸ்விங் மெஷின் ஆபரேட்டர் மற்றும் ஹேண்ட் எம்பிராய்டர் போன்ற தொழில் பிரிவுகளில் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையம் பெண்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருவதால், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி முடித்த மாணவிகள் அல்லது இடையில் என்ற மாணவிகள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் கிண்டி, அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொடர்பு கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 9499055652, 9444714597, 9444714597 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு சென்னை கலெக்டர் விஜயா ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருக்கிறார். இதை மாணவ, மாணவிகள் பெரிதும் வரவேற்று உள்ளனர்.