Categories
மாநில செய்திகள்

மாணவி உடல் தகனம் செய்யவில்லை…… திடீர் முடிவு….. அதிரடி திருப்பம்….!!!!

மர்மமான முறையில் உயிரிழந்த கணியாமூர் பள்ளி மாணவியின் உடலை இன்று பெற்றோர் தரப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அவர்களின் பெற்றோரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் கதறி அழுது கொண்டே தனது பிள்ளையின் உடலை 11 நாட்களுக்குப் பிறகு பெற்றுக் கொண்டனர்.

இதற்கிடையே மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் மக்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் பங்கேற்க கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பலத்த பாதுகாப்போடு மாணவியின் உடல் சொந்த ஊரான  பெரிய நெசலூருக்கு  எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் மாணவியின் உடலை புதைக்க முடிவு செய்தனர். முதலில் மாணவியின் உடலை தகனம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், திடீர் திருப்பமாக புதைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |