Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவியை வற்புறுத்திய வாலிபர்கள்…. வீட்டிற்குள் புகுந்து மிரட்டல்…. 3 பேர் போக்சோவில் கைது….!!

காதலிக்குமாறு கூறி மாணவிக்கு தொல்லை கொடுத்த 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியை அடுத்துள்ள இருமேனி சுனாமி காலனியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகின்றார். இந்நிலையில் உச்சிப்புளியை சேர்ந்த கலைக்குமார்(19), மண்டபம் முகேஷ்(21),  பிள்ளைமடம் பகுதியை சேர்ந்த அஜய்(19) ஆகிய 3 வாலிபர்களும் மாணவியிடம் காதலிக்குமாறு கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவத்தன்று மாணவி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் 3 வாலிபர்களும் வீட்டிற்கு சென்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் 3 வாலிபர்களை பிடித்து உச்சிப்புளி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |