பள்ளி கல்வித் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொது தேர்வு எழுதும் 10,11,12 -ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் விடைத்தாள்களை இந்த மாதம் இறுதிக்குள் திருத்த வேண்டும்.
மேலும் வருகின்ற 23-ஆம் தேதியுடன் இந்த தேர்வு நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் 24-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 1-ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து ஜனவரி மாதம் 2-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.