Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! “விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு”…..  ஜூன் 29-ந் தேதிக்குள் விண்ணப்பிங்க….!!!!

10 மற்றும் 12ம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது.

இதில் விருப்பமுள்ள மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி பள்ளியில் பயின்ற மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் எழுதிய தேர்வு மையத்திலும் 29ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 305 ரூபாயும், பிளஸ் 2 மறுகூட்டலுக்கு உயிரியல்  பாடத்துக்கு 305 ரூபாயும், பிற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணம் செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூபாய் 275 செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்யலாம். இவை இரண்டுக்கும் ஆன்லைனில் பதிவு செய்ய வருகிற 29-ஆம் தேதி கடைசி நாள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |