Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே! பள்ளிகளுக்கு டிசம்பர் 23 முதல் 30 வரை விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசு மேற்கொண்ட முயற்சியினாலும், பொதுமக்கள் தடுப்பூசி மீது கொண்ட ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர். இதையடுத்து மாநிலங்கள் தோறும் பள்ளிகள் திறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி ஆந்திரப் பிரதேசத்திலும் கடந்த ஜூலை மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் வருகின்ற கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஆந்திரப் பிரதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டும் அரசு சில விடுமுறைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டில் கிறிஸ்துமஸ் மற்றும் சங்கராந்தி பண்டிகையை தொடர்ந்து கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை கடந்த டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி என்று உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவில் அனைத்து கிறிஸ்தவ மிஷினரி பள்ளிகளுக்கும் டிசம்பர் 23 முதல் 30 வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளுக்கு டிசம்பர் 31 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். தொடர்ந்து சங்கராந்தி பண்டிகை முன்னிட்டு ஜனவரி 10 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் ஜனவரி 17 தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |