Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! நாளை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்….. பள்ளிக்கல்வித் துறை….!!!

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஐந்தாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் ஆங்கிலம் முதல் தாள் தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் 3119 மையங்களில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகின்றது. இந்த பொது தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க 1,000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 31ஆம் தேதி முடிவடையும் என்றும், பதினோராம் வகுப்பு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதட்டமில்லாமல் நாளை தேர்வை எழுதும் படி பள்ளிக்கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |