Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…..! இன்றே கடைசி நாள்…… உடனே பதிவேற்றம் செய்யுங்க…..!!!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆக.16 முதல் அக்.14 வரை நடத்தப்பட உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த நிலையில், மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றவும் இன்றுடன் காலஅவகாசம் முடிவடைகிறது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.tneaonline.org என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |