நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் தகுதியுடைய மாணவர்களுக்கு திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை ( CSSS) மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி வருகிறது. CSSS திட்டத்தின் கீழ் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 என 3 ஆண்டுகளுக்கு 30,000 ரூபாயும் முதுகலை பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.20,000 என 2 ஆண்டுகளுக்கு 40,000 ரூபாயும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
இந்த உதவிதொகைக்கு நடப்பு 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையதளத்தில் தங்கள் பெயரை மதிப்பெண் பட்டியல், ஆதாரில் உள்ளது போல் பதிவிட்டு ஆதாருடன் வங்கிக் கணக்கு புத்தக நகலையும் இணைத்து வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் http://www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம் என மாநில உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.