Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு பள்ளி தேர்வு மாற்றம்…? – அரசு அதிரடி முடிவு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பின்னர் பெற்றோரின் கருத்து கேட்பிற்கு பின்னர் 9 முதல் 12 ஆம் வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் எனறு தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.

இதையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் ரமலான் பண்டிகை நாட்களில் நடக்க இருப்பதாக எம்.பி வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்துள்ளார். இந்த நிலையில் ரமலான் பண்டிகை போது நடைபெற இருக்கும் 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளை மாற்றுவது குறித்து சிபிஎஸ்இ பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார்.

Categories

Tech |