Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரியில் மருத்துவ மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பாதிப்பின் தாக்கத்தை பொறுத்தே பள்ளிகள் திறப்பதற்கு முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |