கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சாத்தம்பாக்கம் கிராமத்தில் புஷ்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் தனது பசு மாட்டை ஓட்டி சென்றுள்ளார். அப்போது வேலூர் நோக்கி வேகமாக சென்ற கார் புஷ்பா மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த புஷ்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். சிறிது நேரத்தில் பசுமாடும் இறந்துவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புஷ்பாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.