குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாலாஜி-பிரேமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இவர்களின் 2-வது மகனான பாரதி ராஜ் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாடு மேய்த்து விட்டு பாரதிராஜா அப்பகுதியில் இருக்கும் குளிப்பதற்காக குட்டைக்கு சென்றுள்ளார். அதன்பின் நீச்சல் தெரியாத பாரதி ராஜ் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் குட்டையில் மூழ்கிய சிறுவனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.