Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாடியில் நின்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்புதுப்பேட்டை பஜனை கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாபு தனது வீட்டு மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாபுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாபு பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |