Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாசி அமாவாசையை முன்னிட்டு…. புனித நீராடிய பக்தர்கள்…. ராமேஸ்வரத்தில் அலைமோதிய கூட்டம்….!!

மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தட கடலில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தும், புனித நீராடியும் வழிபட்டனர்.

Categories

Tech |