பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென திருமணம் செய்து கொண்டனர்.எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இவர்கள் திடீரென திருமணம் செய்து கொண்டது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இன்று ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மகாலட்சுமி சூட்டிங் இருக்கிறது என்று சொல்லி காலையிலேயே கிளம்பி சென்று விட்டாராம்.அவருக்கு புரட்டாசி ஒன்று ஸ்பெஷலாக வெஜிடேரியன் சாப்பாடு செய்து அதை சூட்டிங் ஸ்பாட்டிற்கு ரவீந்தர் கொண்டு சென்றுள்ளார். “சண்டே family time என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு துரதிஷ்டவசமாக வேறு விதமாக இருக்கிறது. அன்பே வா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் சாப்பாடு எடுத்து செல்லும் டன்ஸோ டெலிவரி பாய் ஆகிவிட்டேன்” என ரவீந்தர் கூறிஉள்ளார்.இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் திருமணம் ஆகி ஒரே வாரத்தில் மகாலட்சுமிக்கு புரட்டாசி விரதம் என்று கூறி வெஜிடேரியன் சாப்பாடு போட்டு மாமியார் கொடுமை செய்கிறீர்களா என்று கிண்டலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.