இங்கிலாந்தில் சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் டன் டன் கிரீனிலிருக்கு ரயில் நிலையம் அருகில் சரக்கு ரயில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலின் அடிப்படையில் தீயை அணைக்க சுமார் 6 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.
https://twitter.com/Kent_Online?ref_src=twsrc%5Etfw
அதன்பின் அவர்கள் சுமார் 2 மணி நேர அளவிற்கும் மேலாக தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தின் காரணமாக ஆர்பிங்டன் மற்றும் சேவானோக்ஸ் அனைத்து ரயில்களையும் ரத்து செய்யப்பட்டதால் அதற்கு பதிலாக பேருந்துகள் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.