மலேசிய நாட்டின் தலைநகர் கோலம்பூர் அருகே பதங்கலி எனும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் தனியார் வேளாண் பண்ணை ஒன்று உள்ளது. இந்த வேளாண் பண்ணை அருகே கூடாரம் அமைத்து சிலர் தங்கி இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென இந்த வேளாண் பண்ணையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 79 பேர் சிக்கிக் கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இருப்பினும் இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் நிலச்சரவில் சிக்கி 51 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்திருப்பதால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.