கொரோனா பாதிப்பிற்கு பின்னர் இந்தியாவின் பொருளாதாரம் மறுமலர்ச்சி செயல்முறையின் வாசலில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி கந்ததாஸ் கூறியுள்ளார்.
மூத்த அதிகாரியான என் கே சிங்கின் சுயசரிதை ‘போர்டு ரெய்ட்ஸ் ஆப் பவர்’ என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவின் பொருளாதாரம் மறுமலர்ச்சியின் வாசலில் இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் இடமளிக்கும் நிலைபாட்டை கடைபிடித்து வருகின்றன. இந்தியாவில் நாம் கொரோனாவின் தாக்கத்திற்கு பின்னர் மறுமலர்ச்சி செயல்முறையின் வாசலில் இன்று இருந்து கொண்டிருக்கிறோம். பல்வேறு நிதி நிறுவனங்கள் அனைத்தும் மூலதனத்தை திரட்டி உள்ளன.
மேலும் சிலர் திட்டமிட்டு வருகிறார்கள். மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நாணய மற்றும் நிதி கொள்கைகளால், இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது. நிதி நிறுவனங்களுக்கு போதுமான மூலதனம் இருப்பது மிகவும் அவசியம். மேலும் ஒரு இடவசதி நிலைப்பாடு என்பது வளர்ச்சியை ஆதரிப்பதற்கு தேவையான அனைத்து நீதிகளையும் வழங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.