Categories
உலக செய்திகள்

மர்ம நபர்களின் வெறிச்செயல்…. 50 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பர்கினா பசோவில் திடீரென மர்ம  நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 50  பேர் உயிரிழந்துள்ளனர். 

மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினா பசோ நாட்டில் மத்ஜோவாரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பயங்கரவாதிகள்  அடிக்கடி தாக்குதல் நடத்தி பொதுமக்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்து கொள்வது வழக்கம். இந்நிலையில் மத்ஜோவாரி பகுதியில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை கவர்னர் ஹூபர்ட் யமியோகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் சாஹேல்
பகுதியில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் உள்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |